எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக பான் இந்தியா நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு அவரது புகழ் பல மடங்கு பெருகி இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அருங்காட்சியகத்தில் பிரபாஸின் பாகுபலி உருவத்தோற்றம் கொண்ட மெழுகுச்சிலை வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களின் காட்சிக்காக சமீபத்தில் வைக்கப்பட்டது. இது பார்வையாளர்களை வசிகரித்தாலும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடாவுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
இதுகுறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர் கூறும்போது, “இது முறைப்படி உரிமம் பெற்று செய்யப்பட்ட சிலை அல்ல. இது குறித்து எங்களிடம் அனுமதி பெற்றோ அல்லது எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தோ செய்யப்படவில்லை. இந்த சிலையை அகற்றுவது குறித்து நாங்கள் முறைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மியூசியத்தில் இருந்து அந்த சிலை விரைவில் அகற்றப்பட உள்ளது
இதுகுறித்து மியூசியம் தரப்பில் கூறும்போது, “தயாரிப்பாளர் இந்த சிலை குறித்த அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. நாங்கள் யாரையும் சென்டிமெண்டாக வருத்தப்படுத்த விரும்பவில்லை. அதனால் இந்த சிலையை விரைவில் அகற்ற உள்ளோம் என்று கூறியுள்ளனர்.