பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை (ஆக.,14) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளராக நடிகை சான்ட்ரா தாமஸ் என்பவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் இரண்டு படங்கள்தான் தயாரித்திருக்கிறார் என்றும் மொத்தம் மூன்று படங்கள் தயாரித்திருக்க வேண்டும் என்றும் காரணம் காட்டி அவரது வேட்பு மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்தனர்.
அதே சமயம் சான்ட்ரா தாமஸ், நான் தனியாக இரண்டு படங்களையும் விஜய் பாபு என்கிற நடிகருடன் இணைந்து ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் மூலமாக ஏழு படங்களையும் தயாரித்திருக்கிறேன் என்றும் வேண்டுமென்றே அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனது மனுவை நிராகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய சான்ட்ரா தாமஸ் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் துணை நீதிமன்றம் சான்ட்ரா தாமஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்த முழு தீர்ப்பின் விவரம் வெளியாகா விட்டாலும் தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று படங்களை தயாரித்து இருக்க வேண்டிய நிலையில் சான்ட்ரா தாமஸ் தான் தனியாக இரண்டு படங்களை மட்டுமே தயாரித்திருப்பதால் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பது எதிர்பாராதது மற்றும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சான்ட்ரா தாமஸ் இது குறித்து தனது வழக்கறிஞர் குழுவுடன் விவாதித்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் நாளை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழலே உருவாகி இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.