நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த ‛3' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்ததால் முதல் படத்திலேயே பிரபலமாகி விட்டார் அனிருத். இந்நிலையில் தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர், சமீபகாலமாக தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் இசையமைத்து இந்திய அளவில் பிரபலமாகி விட்டார்.
இந்த நிலையில் நேற்று ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த ‛கூலி' படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத். இந்த படத்தை பார்ப்பதற்காக அனிருத்தின் தந்தையான நடிகர் ரவி ராகவேந்திரா தியேட்டருக்கு வந்தபோது, அவரிடத்தில் நிருபர்கள் அனிருத்துக்கு எப்போது திருமணம்? என்று ஒரு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ‛‛எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் உங்களை தான் கேட்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அவர் திருமணத்துக்கு என்னையும் கூப்பிடுங்கள்'' என்று கிண்டலாக சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.