சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர். இவரது தங்கை ஷில்பா ஷிரோத்கர். பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஜடாதரா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இவர் பயணித்த கார் மீது அங்குள்ள மிகப் பெரிய நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. காரின் பின்புறம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்தது. இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் ஷில்பா ஷிரோத்கர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இந்த விபத்து குறித்து அவர் நியாயம் கேட்டபோது, இந்த விபத்துக்கு அவர்களது நிறுவனம் பொறுப்பேற்காது என்றும், அந்த பேருந்து ஓட்டிய ஓட்டுனர் தான் பொறுப்பு என்றும் அலட்சியமாக பதில் கூறினார்களாம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஷில்பா ஷிரோத்கர், “இந்த விஷயத்தில் மும்பை போலீசார் மிகவும் கனிவுடன் அதே சமயம் நியாயமாகவும் நடந்து கொண்டு சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.