சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! |

மோகன்லால் நடிப்பில் கடந்த 1992ல் மலையாளத்தில் வெளியான படம் சதயம். பிரபல எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதையை இயக்குனர் சிபி மலயில் இயக்கியிருந்தார். சதானந்தன் என்கிற தூக்கு தண்டனை கைதி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கண்ணூர் சென்ட்ரல் ஜெயிலில் படமாக்கப்பட்டது. அப்போது தூக்குத் தண்டனை கைதியாக நடித்த மோகன்லாலுக்கு தரப்பட்டிருந்த அறை நிஜமாகவே ரிப்பர் சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு கொலை கைதிகள் தங்கி இருந்த அறை தான்.
அது மட்டுமல்ல அந்த படத்தை மோகன்லாலை தூக்கில் போடுவது போல தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிவிடும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து அதிகாரி ஒருவர் மோகன்லாலிடம் வந்து இப்போது உங்கள் கழுத்தில் மாட்டப்பட்ட கயிறு கூட 13 வருடங்களுக்கு முன்பு ஒருவரை தூக்கில் போட பயன்படுத்தப்பட்ட கயிறு தான் என்று சொன்னதும் மோகன்லால் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம் தனக்கு அந்த படத்தில் கிடைத்ததாக மோகன்லால் பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.