என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மோகன்லால் நடிப்பில் கடந்த 1992ல் மலையாளத்தில் வெளியான படம் சதயம். பிரபல எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதையை இயக்குனர் சிபி மலயில் இயக்கியிருந்தார். சதானந்தன் என்கிற தூக்கு தண்டனை கைதி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கண்ணூர் சென்ட்ரல் ஜெயிலில் படமாக்கப்பட்டது. அப்போது தூக்குத் தண்டனை கைதியாக நடித்த மோகன்லாலுக்கு தரப்பட்டிருந்த அறை நிஜமாகவே ரிப்பர் சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு கொலை கைதிகள் தங்கி இருந்த அறை தான்.
அது மட்டுமல்ல அந்த படத்தை மோகன்லாலை தூக்கில் போடுவது போல தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிவிடும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து அதிகாரி ஒருவர் மோகன்லாலிடம் வந்து இப்போது உங்கள் கழுத்தில் மாட்டப்பட்ட கயிறு கூட 13 வருடங்களுக்கு முன்பு ஒருவரை தூக்கில் போட பயன்படுத்தப்பட்ட கயிறு தான் என்று சொன்னதும் மோகன்லால் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம் தனக்கு அந்த படத்தில் கிடைத்ததாக மோகன்லால் பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.