இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் |

மோகன்லால் நடிப்பில் கடந்த 1992ல் மலையாளத்தில் வெளியான படம் சதயம். பிரபல எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதையை இயக்குனர் சிபி மலயில் இயக்கியிருந்தார். சதானந்தன் என்கிற தூக்கு தண்டனை கைதி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கண்ணூர் சென்ட்ரல் ஜெயிலில் படமாக்கப்பட்டது. அப்போது தூக்குத் தண்டனை கைதியாக நடித்த மோகன்லாலுக்கு தரப்பட்டிருந்த அறை நிஜமாகவே ரிப்பர் சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு கொலை கைதிகள் தங்கி இருந்த அறை தான்.
அது மட்டுமல்ல அந்த படத்தை மோகன்லாலை தூக்கில் போடுவது போல தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிவிடும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து அதிகாரி ஒருவர் மோகன்லாலிடம் வந்து இப்போது உங்கள் கழுத்தில் மாட்டப்பட்ட கயிறு கூட 13 வருடங்களுக்கு முன்பு ஒருவரை தூக்கில் போட பயன்படுத்தப்பட்ட கயிறு தான் என்று சொன்னதும் மோகன்லால் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம் தனக்கு அந்த படத்தில் கிடைத்ததாக மோகன்லால் பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.




