2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்தது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டபோது, ‛‛திமுக.,வினர் என்னை ‛சங்கி.. சங்கி..' என நான்கு வருடமாக சொல்லி சொல்லி ஏற்கனவே என்னை பா.ஜ.,வில் சேர்த்துவிட்டனர். திமுக.,வினர் என்னை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த பல சமூக விஷயங்களில் திமுக அரசின் பாராமுகத்தை பார்த்து கட்சி அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் பா.ஜ.,வில் சேர்ந்ததற்கான முழு ‛கிரெடிட்'ம் திமுக.,வுக்கு தான் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே மக்கள் பணிகளை செய்து வருகிறேன். அதனை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். வேறு எந்த பணம், பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை'' எனக் கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.




