வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்தது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டபோது, ‛‛திமுக.,வினர் என்னை ‛சங்கி.. சங்கி..' என நான்கு வருடமாக சொல்லி சொல்லி ஏற்கனவே என்னை பா.ஜ.,வில் சேர்த்துவிட்டனர். திமுக.,வினர் என்னை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த பல சமூக விஷயங்களில் திமுக அரசின் பாராமுகத்தை பார்த்து கட்சி அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் பா.ஜ.,வில் சேர்ந்ததற்கான முழு ‛கிரெடிட்'ம் திமுக.,வுக்கு தான் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே மக்கள் பணிகளை செய்து வருகிறேன். அதனை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். வேறு எந்த பணம், பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை'' எனக் கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.