திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

சென்னை : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, சுதந்திர தினமான இன்று பாஜவில் இணைந்தார்.
'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி சினிமாவில் நடித்து வருவதோடு, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதில் சில சர்ச்சைகளில் சிக்கி சிறையும் சென்றார்.
இந்நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி பாஜவில் இணைந்தார். அவருடன் பிக்பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும் பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.