நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ் நடிக்கும் படம் 'வானரன்'. இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் ''ராமன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது நெற்றியில் செந்துாரத்தால் சீதை நாமம் இட்டார், ராமபிரான் மீது அன்பு கொண்ட அனுமன் தனது உடல் முழுவதும் செந்துாரத்தை பூசிக்கொண்டார். ராமரை பற்றி பேசும்போது அனுமன் அங்கே இருப்பதாக சொல்வார்கள். இந்த விழாவிலும் அனுமன் இருப்பார். சென்சிபிள் ஆக படம் எடுக்க கூடாது. சென்ஸ் ஆக எடுக்கணும்.'' என்றார்.
நடிகை கஸ்துாரி பேசுகையில், ''வட இந்தியாவில், தெலுங்கில் வலதுசாரி சிந்தனை படங்கள் வந்து, வெற்றி பெறுகின்றன. தமிழகத்திலும் அந்த நிலை மாறும். தமிழ் சினிமாவில் ஒரு தரப்பு சிந்தனைகளை கேலி செய்கிறார்கள். ஒரு பிரிவினரை மட்டும் அதிகம் விமர்சனம் செய்கிறார்கள். அந்த பிரிவை சேர்ந்த ஆண்கள் என்றால் காமெடியாக சித்தரிக்கிறார்கள், பெண்கள் என்றால் ஒழுக்கம் கெட்டவளாக காண்பிக்கிறார்கள். இது தவறு. இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒருவிலை, சின்ன பட்ஜெட் படங்களுக்கு குறைந்த விலை வைக்க வேண்டும்'' எனப் பேசினார்.