நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.
''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.
தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.