ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டூடியோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் வாழ்த்துடன் கேக் வெட்டி அவர் கொண்டாடினார். பின்னர் அளித்த பேட்டியில் ''துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி. இன்றைய பிறந்தநாளில் இனிப்பான செய்தியை சொல்லப்போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால், அதே ராயல் பில்ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து, ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வரும் இதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் பாடல்களை எல்லா சூழ்நிலையிலும், எந்த உணர்விலும் கேட்கலாம். என் பாடல்கள் டாஸ்மாக் சரக்கு இல்லாமலே போதை ஏற்றுபவை'' என்றார். அவரை சந்தித்து வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும். முன்பே இதை வலியுறுத்தி இருக்கிறோம். விரைவில் அதை மத்திய அரசு செய்யும் என நம்புகிறேன்' என்றார். இளையராஜா பாடல்களால் வளர்ந்த ராமராஜனும் நேரில் வந்து இளையராஜாவை வாழ்த்தினார்.