மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் ‛அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அப்போது தலைவராக பொறுப்பு வகித்து வந்த மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அவரைத் தொடர்ந்து மொத்தமாக ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த தேர்தலில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு ஓட்டளித்தார்.
அதன்பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உறுப்பினர்களின் கருத்துப்படி புதிய குழு அமைக்கப்படும். அது சரியான பாதையில் நடிகர் சங்க நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும். யாரும் இந்த சங்கத்தை விட்டு விலகவில்லை. எல்லோருமே இப்போதும் இதில் ஒரு அங்கமாக தான் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய நிர்வாகத்தை வழங்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறிய அவர் ஓட்டளித்த பிறகு அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக கிளம்பிச் சென்றார்.