ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரசாங்கம் செயல்படுத்தும் சில நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அது நிச்சயம் திரையுலக நட்சத்திரங்களினால் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்தவகையில் மகாராஷ்டிரா அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் ஊக்கப்படுத்துவதற்காக தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த மாநில அரசு முயற்சித்தாலும் கூட சில பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சல்மான்கானை இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாராம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.