'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய்குமார், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து நவம்பர் 5ல் வெளியான ஹிந்திப் படம் 'சூர்யவன்ஷி'. அஜய் தேவகன், ரன்வீர் சிங் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காரமணமாக மூடப்பட்ட தியேட்டர்களை மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு முன்புதான் தியேட்டர்களைத் திறந்தார்கள்.
அதற்கடுத்த இரண்டு வாரங்களில் வெளிவந்த 'சூர்யவன்ஷி' படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்தது பாலிவுட்டில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படம் இந்தியாவில் மட்டும 166 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பாலிவுட்டில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் முறையாக 100 கோடியைக் கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதுமான வசூல் 250 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.