வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
அக்ஷய்குமார் நடித்த பெல்பாட்டம் படம் தியேட்டர்களில் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் அந்த படம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும் அக்ஷய்குமார் தனது படங்கள் தியேட்டரில்தான் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அக்ஷய்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் சூர்யவன்ஷி. இதில் அவருடன் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் நடித்துள்ளனர். ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாரான இந்தப் படம் ஊரடங்கு காரணமாக வெளிவரவில்லை. முழுமையாகத் திரையரங்குகள் திறப்பதற்குப் படக்குழு காத்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூர்யவன்ஷி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பிறகு பாலிவுட்டில் தியேட்டரில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் இதுவாகும். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள், பாலிவுட் சினிமாவின் நிலை சீராகும் என்கிறார்கள்.