வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், கத்ரினா கைப், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள பாலிவுட் படம் சூர்யவன்ஷி. ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோகித்தும் தயாரித்துள்ளார். முன்னணி நடிகர்கள் நடிக்க சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா தளர்வுகள் அமுலுக்கு வந்தாலும் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டருக்கு கூட்டம் வராத காரணத்தால், சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதோடு மூவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
ஏப்ரல் 30ம் தேதி சூர்யவன்ஷி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாவிட்டால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.