'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே கவனிக்கப்படாதவர் அந்த நடிகர். அந்தப் படம் வந்து போனதே பலருக்கும் தெரியாது. அதற்குப் பின் ஓரிரு வருட இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் நேரடியாக வெளியான ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கடுத்து அப்பாவை செல்லமாக அழைக்கும் படத்தில் நடித்தார். தியேட்டரில் வெளியான அந்தப் படம் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்தது.
அதன்பின் தான் அவரது அணுகுமுறை அப்படியே மாறிவிட்டதாம். அதற்கடுத்து அவரை அணுகிய தயாரிப்பாளர்களை பல கோடி சம்பளம் கேட்டு ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த வருடம் அவர் நடித்து வந்த ஒரு படத்திற்கு வெற்று பில்டப் கொடுத்து ஓட வைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது ஓடவேயில்லை. அது போலவே கடந்த வாரம் வெளியான ஒரு 'பிச்சைக்காரன்' படத்திற்கும் பில்டப் கொடுத்து ஓட வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போனவர்கள்தான் தெறித்து ஓடி வந்தார்களாம். ஒரு சில நாட்கள் என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார்கள். இப்போது எத்தனை கோடி நஷ்டம் வரும் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஒரே வெற்றியில் தலை, கால் தெரியாமல் ஆடிய அந்த நடிகருக்கு பிச்சைக்காரன் நல்லதொரு பாடம் எடுத்திருக்கிறார் என கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக அந்தப் படத் தோல்வியைத்தான் பேசுகிறார்களாம். அவரை வைத்து அடுத்து படங்களை எடுத்துள்ள தயாரிப்பாளர்கள் வியாபாரத்திற்கு என்ன செய்வது என தவிப்பதாகத் தகவல்.