விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் |

டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே கவனிக்கப்படாதவர் அந்த நடிகர். அந்தப் படம் வந்து போனதே பலருக்கும் தெரியாது. அதற்குப் பின் ஓரிரு வருட இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் நேரடியாக வெளியான ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கடுத்து அப்பாவை செல்லமாக அழைக்கும் படத்தில் நடித்தார். தியேட்டரில் வெளியான அந்தப் படம் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்தது.
அதன்பின் தான் அவரது அணுகுமுறை அப்படியே மாறிவிட்டதாம். அதற்கடுத்து அவரை அணுகிய தயாரிப்பாளர்களை பல கோடி சம்பளம் கேட்டு ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த வருடம் அவர் நடித்து வந்த ஒரு படத்திற்கு வெற்று பில்டப் கொடுத்து ஓட வைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது ஓடவேயில்லை. அது போலவே கடந்த வாரம் வெளியான ஒரு 'பிச்சைக்காரன்' படத்திற்கும் பில்டப் கொடுத்து ஓட வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போனவர்கள்தான் தெறித்து ஓடி வந்தார்களாம். ஒரு சில நாட்கள் என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார்கள். இப்போது எத்தனை கோடி நஷ்டம் வரும் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஒரே வெற்றியில் தலை, கால் தெரியாமல் ஆடிய அந்த நடிகருக்கு பிச்சைக்காரன் நல்லதொரு பாடம் எடுத்திருக்கிறார் என கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக அந்தப் படத் தோல்வியைத்தான் பேசுகிறார்களாம். அவரை வைத்து அடுத்து படங்களை எடுத்துள்ள தயாரிப்பாளர்கள் வியாபாரத்திற்கு என்ன செய்வது என தவிப்பதாகத் தகவல்.