படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் மேனேஜர் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை பரவியது. அந்த நடிகருக்கு மட்டுமல்லாது, சில முன்னணி நடிகைகளுக்கும் அவர் மேனேஜர் ஆக இருக்கிறார். அவரிடம் உள்ள நடிகைகள் பற்றி நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள், டிவி சானல்கள், என பாசிட்டிவ்வான செய்திகளை வரவழைப்பது அவர் வழக்கமாம். அது மட்டுமல்லாது பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் அவர் தேடித் தருகிறாராம். அதனால், சில நடிகைகள் அவரை தங்களது மேனேஜர் ஆகப் பணி புரிய வைத்துள்ளார்கள்.
அதேசமயம், அவரிடமிருந்து விலகிச் செல்லும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்வதற்கும் மற்ற செய்தித் தளங்களில் செய்திகளை வரவழைக்கவும் ஆட்களை செட் செய்து வைத்துள்ளாராம். அதனால், அவர்களுக்கு புதிதாக நல்ல வாய்ப்புகள் கிடைக்காதபடி பார்த்துக் கொள்கிறாராம். இதுதான் அந்த மேனேஜர் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக வந்த செய்தி.
தழிழில் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களில் நடித்த ஒரு நாயகி, அந்த மேனேஜர் வேண்டாமென விலகியுள்ளார். வெற்றிப் படங்களில் நடித்த பின்பும், அவர் தன்னை விட்டு விலகியதால் புதிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்காதபடி செய்துவிட்டாராம். இப்படித்தான் இதற்கு முன்பும் ஒரு மேனேஜர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது அவர் கைவசம் ஒரு நடிகை கூட இல்லை, நடிகர் கூட இல்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ள நடிகர் தனது மேனேஜர் குறித்து தெரிந்து வைத்துள்ளாரா இல்லையா என்றும் கோலிவுட்டில் கேள்வி கேட்கிறார்கள்.