மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடவுள் பெயர் கொண்ட படத்தையும், உலகத்திலேயே இல்லாத மிருகத்தின் பெயர் கொண்ட படத்தையும் இயக்கிய இயக்குனர், இரண்டு படங்களின் வெற்றியால் கொஞ்சம் ஓவராகவே போகிறார் என்கிறது சினிமா வட்டாரம். அவர் அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் படம்.
அந்த இரண்டு படங்களுக்கும் உதவி இயக்குனர்கள் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் சில பல கண்டிஷன்களைப் போட்டுள்ளார். அதுதான் கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுகளுக்குக் கூட இத்தனை கண்டிஷன்கள் போட மாட்டார்கள். இவர் இவ்வளவு போடுகிறாரே என்று கிண்டலடிக்கிறார்கள். அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த மிதப்பில் இருக்கிறாரோ என்கிறார்கள். பல வெற்றிகளைக் கொடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள். அதனால், அடக்கி வாசிக்க இயக்குனர் கற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வைக்கிறார்கள் சினிமாவின் சீனியர்கள்.