ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிமிஷிகா. இந்த தொடருக்கு பின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தாலும் எந்தவொரு சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிமிஷிகா, கார்த்திக் வாசுவுக்கு ஜோடியாக புனிதா என்கிற புதிய சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கிறது. அதுவும் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளிடம் தான் அதிகம் அட்ஜெஸ்ட்மென்டுக்கு கேட்கப்படுகிறது. இது சில சமயங்களில் அந்த சீரியலின் இயக்குனர்களுக்கே தெரியாமல் நடக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும் இது போல பெண்களை கார்னர் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் ஆண்களுக்கும், அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியில் நிமிஷிகா பேசியுள்ளார்.