பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ தொலைக்காட்சி, சோஷியல் மீடியா என அனைத்திலும் புயலை கிளப்பியது. சின்னத்திரை பிரபலங்கள் தாண்டி, அரசியல் விமர்சகர்கள் கூட இந்த பஞ்சாயத்தை கையில் எடுத்து மணிமேகலை சரியா? பிரியங்கா சரியா? என தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த சிலரே கூட திடீரென அந்தர் பல்டி அடித்து மாற்றி பேசியிருந்தனர். பிரபல நடிகை ஷகிலா, மணிமேகலையை ஓடிப்போனவள் என்று தேவையற்ற விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில், இதற்கு தற்போது வீடியோ ஒன்றில் பதிலடி கொடுத்துள்ள மணிமேகலை, கூட இருக்கிறவர்களை தான் நம்பவே கூடாது என்று கலாய்க்கும் விதமாக பேசியிருக்கிறார்.
அவரது வீடியோவில் , 'நான் ஓடிப்போனது எங்க அம்மாவுக்கே பிரச்னை இல்லை. ஆனால், சிலர் வித்தியாசமா கூவுறாங்க' என்று ஷகிலாவை தாக்கி பேசியுள்ளார். மேலும், 'சிலர் வாட்சப்பில் ஒரு மாதிரி பேசிவிட்டு, வீடியோவில் வேறு மாதிரி பேசுகிறார்கள். மணி (மணிமேகலை) முக்கியம் இல்லை மணி (பணம் ) தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அந்த சொம்புகளுக்கெல்லாம் இனி என்ன மரியாதை?' என்று ஒரே வீடியோவில் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்கி பேசியிருக்கிறார்.