அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ தொலைக்காட்சி, சோஷியல் மீடியா என அனைத்திலும் புயலை கிளப்பியது. சின்னத்திரை பிரபலங்கள் தாண்டி, அரசியல் விமர்சகர்கள் கூட இந்த பஞ்சாயத்தை கையில் எடுத்து மணிமேகலை சரியா? பிரியங்கா சரியா? என தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த சிலரே கூட திடீரென அந்தர் பல்டி அடித்து மாற்றி பேசியிருந்தனர். பிரபல நடிகை ஷகிலா, மணிமேகலையை ஓடிப்போனவள் என்று தேவையற்ற விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில், இதற்கு தற்போது வீடியோ ஒன்றில் பதிலடி கொடுத்துள்ள மணிமேகலை, கூட இருக்கிறவர்களை தான் நம்பவே கூடாது என்று கலாய்க்கும் விதமாக பேசியிருக்கிறார்.
அவரது வீடியோவில் , 'நான் ஓடிப்போனது எங்க அம்மாவுக்கே பிரச்னை இல்லை. ஆனால், சிலர் வித்தியாசமா கூவுறாங்க' என்று ஷகிலாவை தாக்கி பேசியுள்ளார். மேலும், 'சிலர் வாட்சப்பில் ஒரு மாதிரி பேசிவிட்டு, வீடியோவில் வேறு மாதிரி பேசுகிறார்கள். மணி (மணிமேகலை) முக்கியம் இல்லை மணி (பணம் ) தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அந்த சொம்புகளுக்கெல்லாம் இனி என்ன மரியாதை?' என்று ஒரே வீடியோவில் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்கி பேசியிருக்கிறார்.