'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிமிஷிகா. இந்த தொடருக்கு பின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தாலும் எந்தவொரு சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிமிஷிகா, கார்த்திக் வாசுவுக்கு ஜோடியாக புனிதா என்கிற புதிய சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கிறது. அதுவும் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளிடம் தான் அதிகம் அட்ஜெஸ்ட்மென்டுக்கு கேட்கப்படுகிறது. இது சில சமயங்களில் அந்த சீரியலின் இயக்குனர்களுக்கே தெரியாமல் நடக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும் இது போல பெண்களை கார்னர் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் ஆண்களுக்கும், அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியில் நிமிஷிகா பேசியுள்ளார்.