இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‛வாரணாசி' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவிடம் இயக்குனர் ராஜமவுலி கதை சொல்ல வந்தபோது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இந்த படத்தில் எனக்கு நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
அந்த பேட்டியின் போது நடிகர் மகேஷ்பாபுவும் உடன் இருந்தார். அப்போது பிரியங்கா கூறுகையில், நான் படங்களில் நடனமாடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த படத்தில் எனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ராஜமவுலியிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
“அதற்கென்ன.. மகேஷ்பாபுவும் இதே போல சிறிய வருத்தத்தில் இருக்கிறார். அருமையான டான்ஸ் நபராக உருவாக்கி விடலாம்” என்று உறுதி அளித்தாராம் ராஜமவுலி.




