நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‛வாரணாசி' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவிடம் இயக்குனர் ராஜமவுலி கதை சொல்ல வந்தபோது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இந்த படத்தில் எனக்கு நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
அந்த பேட்டியின் போது நடிகர் மகேஷ்பாபுவும் உடன் இருந்தார். அப்போது பிரியங்கா கூறுகையில், நான் படங்களில் நடனமாடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த படத்தில் எனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ராஜமவுலியிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
“அதற்கென்ன.. மகேஷ்பாபுவும் இதே போல சிறிய வருத்தத்தில் இருக்கிறார். அருமையான டான்ஸ் நபராக உருவாக்கி விடலாம்” என்று உறுதி அளித்தாராம் ராஜமவுலி.




