ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை | குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல் | விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‛வாரணாசி' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவிடம் இயக்குனர் ராஜமவுலி கதை சொல்ல வந்தபோது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இந்த படத்தில் எனக்கு நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
அந்த பேட்டியின் போது நடிகர் மகேஷ்பாபுவும் உடன் இருந்தார். அப்போது பிரியங்கா கூறுகையில், நான் படங்களில் நடனமாடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த படத்தில் எனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ராஜமவுலியிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
“அதற்கென்ன.. மகேஷ்பாபுவும் இதே போல சிறிய வருத்தத்தில் இருக்கிறார். அருமையான டான்ஸ் நபராக உருவாக்கி விடலாம்” என்று உறுதி அளித்தாராம் ராஜமவுலி.