தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரிலிருந்து அதன் இயக்குநர் பிரதாப் மணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சித்து, ஸ்ரேயா அஞ்சன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. விறுவிறுப்பான திரைக்கதையுடன் டிஆர்பியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இந்த தொடரை இயக்குநர் பிரதாப் மணி என்பவர் இயக்கி வந்தார்.
இவர் நடிகர்களிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையுடன் பிரச்னை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகத்தினர் பிரதாப்பை அதிரடியாக சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். பிரதாப்பிற்கு பதிலாக இயக்குநர் ஜீவா தான் வள்ளியின் வேலன் தொடரை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.