ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி |

சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டிக்கிடையே திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார் தர்ஷன். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து தர்ஷனை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சனம் ஷெட்டி.
இந்த நிலையில், நேற்று பார்க்கிங் பிரச்சினையில் நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதலில் தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பற்றி இணையப்பக்கத்தில் சனம் ஷெட்டி ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், தர்ஷனை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும் ஒரு நொடி எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹாஸ்பிட்டலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதியின் மகன் சொன்னது தான் உண்மை என்றால், அதற்கு ஆதாரமாக சிசிடிவி புட்டேஜை வெளியிடலாமே. இரண்டு பேருக்கும் இடையே மோதல் நடைபெற்று இருக்கும் போது தர்ஷன் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்யாத நபர் தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும் என்று தர்ஷனுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.