சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த மான்யா ஆனந்த் தமிழில் வானத்தைப் போல தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வந்த ஸ்வேதா விலகியவுடன் அவருக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த மான்யாவிற்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், போக போக ஸ்வேதாவை விட மான்யா தான் துளசி என்ற கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அந்த தொடர் முடிவுக்கு வந்தவுடன் தமிழில் வேறு எந்த சீரியலிலும் அவர் நடிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மீண்டும் அவரது என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே மான்யா ஆனந்த், ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி, சூர்யவம்சம் ஆகிய தொடர்களை தயாரித்திருந்த மங் ஸ்டூடியோ நிறுவனம் தான் இந்த புதிய தொடரை தயாரிக்க உள்ளது. மிக விரைவில் இந்த தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.