ஒரு மாதமாக காதல்... 4 மாதத்தில் திருமணம் : விஷால் சொல்கிறார் | பிளாஷ்பேக்: ஆட்டோ சங்கரை உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமான காட்சிகள் நீக்கம் | நடிகையின் நகைகளை திருடியவர் கைது: ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு | சந்தானம் பட வழக்கு முடித்து வைப்பு | வார் 2 படத்தின் முக்கிய அப்டேட் | அனிருத்தை புகழ்ந்த விஜய் தேவரகொண்டா | தொடரும் படத்திற்காக தள்ளிவைக்கப்பட்ட மோகன்லாலின் சோட்டா மும்பை ரீ ரிலீஸ் | ரிலீஸ் தேதியை நான் சொல்றேன் : கூலி துவங்கும்போதே லோகேஷ் போட்ட கண்டிஷன் | மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குனர் மறைந்து ஒரு வருடம் கழித்து வெளியாகும் படம் |
தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த மான்யா ஆனந்த் தமிழில் வானத்தைப் போல தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வந்த ஸ்வேதா விலகியவுடன் அவருக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த மான்யாவிற்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், போக போக ஸ்வேதாவை விட மான்யா தான் துளசி என்ற கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அந்த தொடர் முடிவுக்கு வந்தவுடன் தமிழில் வேறு எந்த சீரியலிலும் அவர் நடிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மீண்டும் அவரது என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே மான்யா ஆனந்த், ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி, சூர்யவம்சம் ஆகிய தொடர்களை தயாரித்திருந்த மங் ஸ்டூடியோ நிறுவனம் தான் இந்த புதிய தொடரை தயாரிக்க உள்ளது. மிக விரைவில் இந்த தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.