நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னையில் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனம், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் அந்நிறுவனத்தின முதலீடுகள் அதிகம். சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'எம்புரான்' படத்தின் பங்குதாரராக கடைசி நேரத்தில் சேர்ந்தது.
இந்நிலையில் கோகுலம் நிறுவனத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலன் வீடு உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 05) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.