'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சென்னையில் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனம், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் அந்நிறுவனத்தின முதலீடுகள் அதிகம். சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'எம்புரான்' படத்தின் பங்குதாரராக கடைசி நேரத்தில் சேர்ந்தது.
இந்நிலையில் கோகுலம் நிறுவனத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலன் வீடு உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 05) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.