Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் மீண்டும் நடிக்கிறார் மல்லிகா ஷெராவத்

24 பிப், 2021 - 01:24 IST
எழுத்தின் அளவு:
mallika-sherawat-to-act-again-in-tamil-film

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாரிக்கும் படம் பாம்பாட்டம். ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்கள். சவுகார் பேட்டை, கொம்பு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.


பேண்டசி படமான இதில் மல்லிகா ஷெராவத் நாகமதி இளவரசியாக நடிக்கிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபல தொழில் அதிபரின் மகள் நாயகியாக அறிமுகமாகும் " நாட்டியம் "பிரபல தொழில் அதிபரின் மகள் நாயகியாக ... புதுமுகங்களின் நின்று கொல்வான் புதுமுகங்களின் நின்று கொல்வான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)