ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மல்லிகா ஷெராவத் . தமிழில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்தவர், சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதோடு ஜாக்கி சான் நடித்த ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் ஆர்கே என்றொரு படத்தில் நடித்துள்ளார் மல்லிகா ஷெராவத். இந்த நிலையில் ஹீரோக்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
மல்லிகா கூறுகையில், ‛‛ஹீரோக்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நடிகைகளை தான் விரும்புகிறார்கள். எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்கிறாரோ அவருக்கு வாய்ப்பு. அவர் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்ய வேண்டும். நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்தாலும் செல்ல வேண்டும். அப்படி சென்றால் அவர்களுக்கு பட வாய்ப்பு இருக்கும். நான் இதுபோன்ற சமரசங்களுக்கு உடன்பட மாட்டேன். இதனால் பட வாய்ப்புகளை இழந்தேன். ஆனாலும் தொடர்ந்து நான் படங்களில் நடிக்கிறேன்'' என்கிறார்.
மல்லிகா வெளிப்படையாக தெரிவித்துள்ள இந்த கருத்து பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.