ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹம்சஹர்ஷா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் நின்று கொல்வான். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மும்மொழிகளில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கியுள்ளார் வி பி சங்கர். அர்ஜூன் சந்த்ரா, கருணா டோக்ரா, யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி, கீதா, நிழல்கள் ரவி, ராஜீவ் பிள்ளை மற்றும் பவித்ரா லோகேஷ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வி.பி.சங்கர் கூறியதாவது: ஒரு பணக்கார இளைஞன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ஒரு கர்நாடக இசை குடும்பத்தை சார்ந்த பெண்ணை காதலிக்கிறான். மகனின் காதலை பற்றி தெரிந்த இளைஞனின் தந்தை அவர்களின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.
இந்நிலையில் இசைக் கச்சேரிக்காக கதாநாயகி தனது தாயுடன் கோவா செல்ல, அங்கு கதாநாயகி கடத்தப்படுகிறார். நாயகன் நாயகியை கடத்தல் கும்பலிடமிருந்து கண்டுபிடிக்க முயல பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் வென்றது யார் என்பதை விறுவிறுப்பான முறையில் படமாக்கி இருக்கிறோம். என்றார்.