சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் 13 சென்ட் நிலம் உள்ளது. இதில், வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர், காசிம் முகமது செய்து வந்தனர். இவர்களுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணியை முடிக்க வலியுறுத்திய பாபி சிம்ஹாவை, அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களோடு கொடைக்கானலைச் சேர்ந்த உசைன், பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.