2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ட்ரெயின், ஏஸ், பாண்டிராஜ் இயக்கும் படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்து தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கும் படத்திலும் அவர் நடிக்கப் போகிறார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், சமீபகாலமாக பூரி ஜெகநாத் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், இது போன்று தோல்வி பட இயக்குனர்களின் படங்களை தேர்வு செய்கிறாரே என்று அந்த நெட்டிசன் பதிவு போட்டுள்ளார்.
இதையடுத்து அதற்கு விஜய் சேதுபதி தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்காத நிலையில், நடிகர் சாந்தனு எக்ஸ் பக்கத்தில் அந்த நெட்டிசனுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், யாரைப் பற்றியும் இதுபோன்று அவதூறாக பேச வேண்டாம். பொது வெளிவில் வார்த்தைகளை கவனவாக பேசுங்கள். பூரி ஜெகநாத் என்பவர் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும். சகட்டுமேனிக்கு யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் சாந்தனு.




