பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி |
மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ட்ரெயின், ஏஸ், பாண்டிராஜ் இயக்கும் படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்து தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கும் படத்திலும் அவர் நடிக்கப் போகிறார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், சமீபகாலமாக பூரி ஜெகநாத் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், இது போன்று தோல்வி பட இயக்குனர்களின் படங்களை தேர்வு செய்கிறாரே என்று அந்த நெட்டிசன் பதிவு போட்டுள்ளார்.
இதையடுத்து அதற்கு விஜய் சேதுபதி தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்காத நிலையில், நடிகர் சாந்தனு எக்ஸ் பக்கத்தில் அந்த நெட்டிசனுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், யாரைப் பற்றியும் இதுபோன்று அவதூறாக பேச வேண்டாம். பொது வெளிவில் வார்த்தைகளை கவனவாக பேசுங்கள். பூரி ஜெகநாத் என்பவர் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும். சகட்டுமேனிக்கு யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் சாந்தனு.