சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
கடவுள் பெயர் கொண்ட படத்தையும், உலகத்திலேயே இல்லாத மிருகத்தின் பெயர் கொண்ட படத்தையும் இயக்கிய இயக்குனர், இரண்டு படங்களின் வெற்றியால் கொஞ்சம் ஓவராகவே போகிறார் என்கிறது சினிமா வட்டாரம். அவர் அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் படம்.
அந்த இரண்டு படங்களுக்கும் உதவி இயக்குனர்கள் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் சில பல கண்டிஷன்களைப் போட்டுள்ளார். அதுதான் கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுகளுக்குக் கூட இத்தனை கண்டிஷன்கள் போட மாட்டார்கள். இவர் இவ்வளவு போடுகிறாரே என்று கிண்டலடிக்கிறார்கள். அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த மிதப்பில் இருக்கிறாரோ என்கிறார்கள். பல வெற்றிகளைக் கொடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள். அதனால், அடக்கி வாசிக்க இயக்குனர் கற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வைக்கிறார்கள் சினிமாவின் சீனியர்கள்.