நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

பிரபல பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா. இவர் மீது டில்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டில்லி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் "கடந்த 2020ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தபோது, டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு இயக்குனர் சனோஜ் மிஸ்ரா அறிமுகமானார். என்னிடம் பேசும்போது உனக்கு சினிமா வாய்ப்பு தருகிறேன் என்று கூறுவார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் சினிமா வாய்ப்பு தொடர்பாக ஜான்சிக்கு வந்து என்னை சந்தித்தார். என்னை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை புகைப்படமாகவும் எடுத்துள்ளார். அந்த படங்களை காட்டி மிரட்டியே என்னை பலமுறை பாலாத்காரம் செய்துள்ளார் " என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தனக்கு முன்ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் சனோஜ் மிஸ்ரா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை தேடி வந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசி விற்பனைக்கு வந்த இளம் பெண் மோனலிசா சமூக வலைதளத்தில் வைரலானார். அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஒப்பந்தம் செய்தவர்தான் இந்த சனோஜ் மிஸ்ரா.