உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயாபச்சன், ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 28ல் வெளிவந்த ஹிந்திப் படம் 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி'. கரண் ஜோஹர் சினிமாவில் நுழைந்த 25வது வருடத்தில் வெளியாகியுள்ள படம் இது. 2016ல் வெளிவந்த 'ஹே தில் ஹை முஷ்கில்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களாக திரைப்படங்கள் எதையும் கரண் இயக்கவில்லை.
“லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ்” ஆகிய வெப் தொடர்களில் ஒரு பகுதியை மட்டும் இயக்கியிருந்தார். தமிழில் வெளிவந்த 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' படங்களின் சாயலில் வெளிவந்த 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் பெரிய சாதனையைப் படைக்கவில்லை. இருப்பினும் கடந்த பத்து நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 105 கோடி வசூலைப் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.100 கோடி வசூலைக் கடந்த ரன்வீர் சிங்கின் 8வது படமாகவும், ஆலியாவின் 8வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.