ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர் மனைவி ஒருவரிடம் 200 கோடி மோசடி செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவருக்கு பிரபல பாலியுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடந்தையாக இருந்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஜாக்குலின் தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனது நிதி பிரச்சினை சீராகும் என்றும், அதனால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் ஒரு கோடி ரூபாய் பிணையத் தொகை செலுத்தி விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.




