சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர் மனைவி ஒருவரிடம் 200 கோடி மோசடி செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவருக்கு பிரபல பாலியுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடந்தையாக இருந்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஜாக்குலின் தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனது நிதி பிரச்சினை சீராகும் என்றும், அதனால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் ஒரு கோடி ரூபாய் பிணையத் தொகை செலுத்தி விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.




