சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர் மனைவி ஒருவரிடம் 200 கோடி மோசடி செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவருக்கு பிரபல பாலியுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடந்தையாக இருந்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஜாக்குலின் தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனது நிதி பிரச்சினை சீராகும் என்றும், அதனால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் ஒரு கோடி ரூபாய் பிணையத் தொகை செலுத்தி விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.