20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது படங்களில் அற்புதமான நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்தது என்கிற அதிர்ச்சி தகவலை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார் பிபாஷா பாசு.
இது குறித்து அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “எங்கள் முதல் குழந்தைக்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தோம். நான் பெண் குழந்தை தான் பிறக்கும் என என் கணவரிடம் உறுதியாக கூறி வந்தேன். அதேபோல எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் தான் பிறக்கும்போதே இருதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்துள்ளது என்கிற அதிர்ச்சி கலந்த உண்மை எங்களுக்கு தெரிய வந்தது.
அதன் பிறகு வந்த நாட்கள் மிகப் போராட்டமாக கழிந்தன. இந்த தகவலை நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூட சொல்லாமல் மகளுக்கு மருத்துவம் பார்த்தோம். பிறந்த மூன்றாவது மாதத்தில் அவளுக்கு ஓபன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவள் எல்லோரையும் போல நலமுடன் இருக்கிறாள். எந்த பெற்றோருக்கும் இதுபோன்ற நிலைமை வரக்கூடாது” என்று கூறியுள்ளார்.