ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை நட்சத்திரங்கள் அவினாசும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடர் ஆனந்தி. இவர்களுடன் விசித்ரா, நிரோஷா, டாக்டர் கிரி, கரோலின், துர்கா ஆகியோரும் நடிக்கிறார்கள். பத்மாவதியின் கதையை சாய்மருது இயக்குகிறார்.
ஆனந்தி (ஐஸ்வர்யா)மற்றும் வருணின் (அவினாஷ்) ஆகியோரின் முழுமையான காதல் கதை. தந்தை இல்லாத குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய ஆனந்தி, வருணைக் காதலிக்கிறாள். இரு குடும்பங்களிலும் நிலவும் பிரச்சினைகளைத் தாண்டி, இருவரின் காதலும் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. அனைத்து தடைகளையும் உடைத்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
குடும்ப செண்டிமென்ட் நிறைந்த இளமை ததும்பும் காதல் கதை. கடந்த திங்கள் முதல் (ஏப்ரல் 19) ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.