ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
ராஜ் தொலைக்காட்சியில் கடந்த திங்கள் கிழமை முதல் (ஏப்ரல் 19) ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் நீ வருவாய் என. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்கி, ஸ்ருதி, நளினி, ரோஜாஸ்ரி, ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரியாவின் கதையை நாகரசன் இயக்குகிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் கவுரி. தன் முழு குடும்பத்தையும் அவர் தான் சுமக்கிறார். அவருக்கு உதவுகிறார் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அண்ணபூரணி. கவுரியின் நல்ல குணத்தால் ஈர்க்கப்படும் அண்ணபூரனி. அவளை தன் மூத்த மகனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கவுரி, அண்ணபூரணியின் இரண்டாவது மகனை மணக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீரியலின் கதை.