‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
மிஷ்கின் இயக்கிய முதல் படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி. பிறகு இதே பெயரில் ஜெயா டி.வியில் ஒரு தொடர் ஒளிபரப்பானது. தற்போது அதே பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகிறது.
இன்று (ஏப்ரல் 19) தொடங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் அசோக் பாண்டியன், தீபிகா, தரணி, பாபுராஜ், ஸ்வேதா நடிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாகி அக்கிரமங்களை தட்டி கேட்க நினைக்கும் தங்கமயில் என்ற பெண்ணின் கதை. இதில் சிறப்பு என்னவென்றால் தங்கமயிலின் அப்பா ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி. அப்பா, மகளுக்கு இடையிலான மோதலாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தரும் தொடராக உருவாகி உள்ளது. "விதியை வெல்லும் சித்திரமாக வருகிறாள் தங்கமயில்" என்றே விளம்பரம் செய்கிறார்கள்.