தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

மிஷ்கின் இயக்கிய முதல் படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி. பிறகு இதே பெயரில் ஜெயா டி.வியில் ஒரு தொடர் ஒளிபரப்பானது. தற்போது அதே பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகிறது.
இன்று (ஏப்ரல் 19) தொடங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் அசோக் பாண்டியன், தீபிகா, தரணி, பாபுராஜ், ஸ்வேதா நடிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாகி அக்கிரமங்களை தட்டி கேட்க நினைக்கும் தங்கமயில் என்ற பெண்ணின் கதை. இதில் சிறப்பு என்னவென்றால் தங்கமயிலின் அப்பா ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி. அப்பா, மகளுக்கு இடையிலான மோதலாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தரும் தொடராக உருவாகி உள்ளது. "விதியை வெல்லும் சித்திரமாக வருகிறாள் தங்கமயில்" என்றே விளம்பரம் செய்கிறார்கள்.