விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை இயக்குனர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் சீரியலுக்காக தமிழுக்கு அழைத்து வந்தார். இந்த தொடரில் முனிஷ்ராஜா ஹீரோ, தேஜஸ்வினி, தர்ஷா, பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலாம்பிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 166 எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில் ஹீரோயின்களில் ஒருவரான தேஜஸ்வினி சீரியலில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பொண்ணுக்கு தங்க மனசு தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
விலகல் குறித்து தேஜஸ்வினி தரப்பில் கூறப்படுவதாவது: சீரியல் தொடங்கும்போது தேஜஸ்வினிதான் ஹீரோயின். சில எபிசோட்களுக்கு பிறகு தர்ஷா உள்ளே கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு கதையில் தர்ஷாவுக்கு முக்கியத்தும் தரப்பட்டது. ஒரு கட்டத்தில் தர்ஷாவை ஹீரோயினாக மாற்றி, தேஜஸ்வினி கேரக்டரை மெல்ல மெல்ல வில்லியாக மாற்றினார்கள். அது பிடிக்காமல்தான் தேஜஸ்வினி வெளியேறினார் என்கிறார்கள்.