கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' |

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் சுமார் 400 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
பிக்பாஸ் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஏற்கெனவே பணியாற்றுபவர்களையும் திரும்ப அழைத்து படப்பிடிப்பபை நிறுத்துவோம் என்று பெப்சி அறிவித்தது. இந்த பிரச்சினையை கையில் எடுத்த நடிகை குஷ்பு இதனை சுமூகமாக முடித்துள்ளார். இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரியான புரிதல் இல்லாததால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. முறையான தொடர்பு இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்த திரும்பிய குஷ்பு, பிரச்னை என்னவென்று கேட்டார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை பின்பற்றினால் போதும் என்றோம். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பிரதிநிதியாக குஷ்பு சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் பிரச்னையை தீர்த்து வைத்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எத்தனை பேர் வேலை செய்ய வேண்டும், என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் என்று சுமூகமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது என்று பெப்சி முடிவு செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இனி எந்த பிரச்சனையும் இன்றி நடக்கும். என்றார் ஆர்.கே. செல்வமணி.