Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி இணைந்து பயணிப்போம்: தயாரிப்பாளர் சங்கம், பெப்சி கூட்டுப் பேட்டி

16 செப், 2025 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Lets-travel-together-from-now-on:-Producers-Council,-Fefsi-joint-interview
Advertisement


தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்க முயற்சித்தது.

இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற மாட்டார்கள் என பெப்சி அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இப்பிரச்சினையை தீர்க்க, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது. மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு கூட்டாகபேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது "உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இனிவரும் காலங்களில் ஏற்கெனவே இரு சாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இணைந்து செயல்படுவோம்.

திரைத்துறை வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம்" என்றனர்.

பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நீதிமன்ற ஆணையின்படி, தற்போதைய விதிமுறைகளை பராமரிக்கவும், ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தவும் இருசாராரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்ப பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

இருதரப்பு நிர்வாகிகளும் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில், தமிழ் திரைப்படத்துறையின் நலன் கருதி, உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க, இனி வரும் காலங்களில் எவ்வித தொய்வும் இல்லாமல், ஏற்கனவே இருசாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்தி திரைத்தொழிலை நடத்துவோம் என்றும், திரைத்துறை வளர்ச்சிக்காகவும் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: வாழ்வே மாயத்தை உல்டா பண்ணிய ஆர்.சி.சக்திபிளாஷ்பேக்: வாழ்வே மாயத்தை உல்டா ... 30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி 30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in