சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், பாட்மின்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஏப்.,22ம் தேதி பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
தனது குழந்தைக்கு போக, தனது தாய்ப்பாலை அது கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்க அவர் முடிவு செய்தார். அந்தவகையில் தாய்ப்பால் வங்கிகளுக்கு கடந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 30 லிட்டர் வரை தனது தாய்ப்பாலை அவர் தானமான வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‛‛உயிரை காப்பாற்றும் தாய்ப்பாலின் மகிமை அளப்பரியது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வரம். அதை நீங்கள் செய்வதின்மூலம் ஒரு வீரருக்கான மதிப்பை பெறலாம்'' என்றார். ஜூவாலா கட்டாவின் தாய்ப்பால் தானம் குறித்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.