மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜூலியும் 4 பேரும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆலியா மானசா. தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். பணக்கார வீட்டுக்கு வேலைக்காரியாக சென்று அந்த வீட்டின் செல்லப்பிள்ளை சஞ்சயை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்து மருமகளாகிறார்.
ஆலியாவை துரத்த அந்த குடும்பத்தினர் செய்யும் சதியும், அதிலிருந்து அவர் தப்பிப்பதும் தான் கதை. ஆல்யா நடிக்கும் செம்பா கேரக்டர் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கும், சேனலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் ராஜா ராணியிலிருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை மறுத்து ஆலியா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நான் நடிக்கும் ராஜா ராணி சீரியல் பற்றி தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.