சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பின்னர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம், வழக்கு போன்றவற்றால் கட்டட பணிகள் பாதியில் நின்றன. சமீபத்தில் இந்த பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இதற்கு நிதி திரட்டும் பணிகளும் நடக்கின்றன.
நடிகர்கள் கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கினர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார். இப்போது நடிகரும், சங்கத்தின் முன்னாள் துணை தலைவருமான நெப்போலியன் தன் பங்கிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணிகளுக்காக பொது மக்களிடமிருந்து நிதி பெறவில்லை. அதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் நம்ப வேண்டாம் என நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.