விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய், காக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ்க்கும், சுமங்கலி சீரியல் நாயகி திவ்யாவுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள் ளது. அக்டோபர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இதுபற்றி சுமங்கலி திவ்யா கூறுகையில், எங்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. இப்போது தமிழுக்கு புரட்டாசி மாதமாக இருப்பதால் ஐப்பசியில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் நடைபெற உள்ளது. இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், எங்களது திருமணம் காதல் திருமணமல்ல. பெற்றோரால் நிச்சயப்பட்ட திருமணம். ஆர்.கே.சுரேஷைப்போன்று எனது சொந்த ஊரும் ராமநாதபுரம்தான். அவரது ஊருக்கு அருகில் எனது ஊர் உள்ளது.
மேலும், இப்போது நான் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அதேபோல் சுமங்கலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ஆனால் இதன்பிறகு நான் சினிமா, சீரியல் என எதிலும் ஒப்பந்தமாக மாட்டேன். முழு நேர இல்லத்தரசியாகி விடுவேன். என்றாலும், சுமங்கலி சீரியலில் ஒப்பந்தம் இருப்பதால் சீரியல் முடிகிறவரை நடித்துக்கொடுப்பேன். அதன்பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாக மாட்டேன் என்கிறார் திவ்யா.