மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்து புகழ் பெற்றவர் முகேஷ் ராவல். அதன்பிறகு சீரியல்களிலும், திரைப்படங்களிலும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்தார். மும்பையில் வசித்து வந்த முகேஷ் நேற்று முன்தினம் வங்கியில் ரூபாய் நோட்டை மாற்றச் செல்வதாக கூறி காட்கோபருக்கு சென்றுள்ளார். அன்று முழுவதும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
இந்த நிலையில் மும்பே மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள காந்தவலி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் உடல் துண்டு துண்டாகி சிதறி கிடந்தது. ரெயில்வே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து அது முகேஷ்தான் என்பதை உறுதி செய்தனர்.
66 வயதான முகேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரிடமிருந்த பணத்தை பறிப்பதற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் சிக்கிக் கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.