மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் மதன் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய புத்தகம் மனிதர்களும் மர்மங்களும். மனிதனால் கண்டுபிடிக்கமுடியாத அமானுஷ்ய சக்திகள் பற்றி எழுதியிருந்தார். இப்போது அதனையே தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வழங்குகிறார்.
ஆவிகள், பேய்கள், பறக்கும் தட்டுகள், வேற்று கிரகவாசிகள். பெர்முடா முக்கோண ரகசியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுவது, மனோசக்தியால் மனித மூளையை கட்டுப்படுத்துவது, பூர்வ ஜென்ம நினைவுகள், டைம் மிஷின் மூலம் காலத்தை கடந்து செல்வது என பல நிகழ்வுகளை காட்சி தொகுப்புகளுடன் ஆதாரத்துடன் பேச இருக்கிறார் மதன்.
"உலகில் மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட ஆச்சர்யமமான, அதிசயமான நம்ப முடியாத பல சம்பங்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது. இதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து காட்சிகளை சேகரித்திருக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசினாலும் அறிவுபூர்வமான நிகழ்ச்சியா இது இருக்கும் என்கிறார் புதுயுகம் டிவியின் நிகழ்ச்சி அதிகாரி இக்கி. நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.