மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் ரம்யா. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார் அவர். இந்நிலையில் ரம்யாவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபல விமர்சகர் ஒருவருக்கு தகாத கெட்ட வார்த்தைகள் கொண்ட டுவிட்டுகள் அனுப்பப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அந்த டுவிட்களை ரம்யா அனுப்பவில்லையாம். யாரோ மர்ம நபர்கள் அவரது டுவிட்டருக்குள் சென்று தகாத வார்த்தைகளை பதிவு செய்து அதை அந்த விமர்சகருக்கு அனுப்பியுள்ளார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கொடுத்ததோடு, இது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.