குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? |
'தென்றல்' தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானர் ஷாம்லி. அதில் வில்லி வேடம் என்பதால் மிக குறுகிய காலத்தில் பிரபலமானார். அதன் பிறகு 'உதிரிபூக்கள்', 'பைரவி' தொடரில் பாசிட்டிவான கேரக்டராக இருந்து பின்பு நெகட்டிவாக மாறினார். தொடர்ந்து 'மகாபாரதம்', 'ரோமாபுரி பாண்டியன்', என வரிசையாக, பிசியாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது 'பாசமலர்', 'வள்ளி', 'பிரியசகி', தொடர்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் அதிக தொடர்களில் நடித்து வரும் ஒருசில நடிகைகளில் ஷாம்லியும் ஒருவர். 3 ஆண்டுகளுக்குள் 20 தொடர்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.
“லீட் ரோல்தான் வேண்டும் என்ற அடம்பிடிப்பதில்லை. கதைக்கு முக்கியமான ரோலாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரே நேரத்தில் அதிக தொடர்களில் நடித்தாலும் எந்த கேரக்டருக்கும் மேக்அப் போட்டபிறகு அந்த கேரக்டராக மாறிவிடுவேன். அதுதான் சீரியலுக்கு சீரியல் என்னை தனித்துகாட்டுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் சீரியலில் நடிப்பதுதான் சவுகரியமா இருக்கிறிது. என்றாலும் தேடி வரும் சினிமா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்கிறார் ஷாம்லி.